மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அவந்திபுராவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன் அதிர்ச்சி ஓய்வதற்குள் அங்கு மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் ஸ்ரீநகர், அவந்திபுராவில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.

Related posts