சிவாஜியை புகழ்ந்த சூப்பர் ஸ்டார் அமிதாப்

இதுவரையில் ரஜினிகாந்த், சூர்யா, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், ஷங்கர் உள்பட பலர் கேட்டும் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்காமல் இருந்தார், அமிதாப் பச்சன். இப்போது அவரை, உயர்ந்த மனிதன் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வருகிறார், இயக்குனர் தமிழ்வாணன். இரண்டு வருடங்களுக்கு முன் மும்பை சென்று அமிதாப் பச்சனை சந்தித்து தமிழ்வாணன் கதை சொன்னார். இந்த கதை அவரை பெரிதும் கவர்ந்தது.

உயர்ந்த மனிதன் என்ற நேரடி தமிழ் படத்தில் நடிக்க வாக்கு கொடுத்த அமிதாப் பச்சன், இதில் சென்னையில் இருந்து மும்பைக்கு வந்த சீனித்தேவர் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவரது ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கில் எஸ்.ஜே.சூர்யா அவ்வப்போது அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் சிவாஜி கணேசனின் புகைப்படத்தின் கீழ் எஸ்ஜே சூர்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ‘குருவின் நிழலில் இரண்டு சீடர்கள் நானும், சூர்யாவும். சிவாஜி தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு அடையாளம். அவருடைய புகைப்படம் இந்த சுவற்றை அலங்கரிக்கிறது. நான் மரியாதையுடன் அவர் காலை தொட்டேன் என்றார். அவர் மாஸ்டர்… நாம் அவருடைய சீடர்கள்’ என்று தமிழில் பதிவு செய்துள்ளார்.

Related posts