புலிகள் வழங்கிய காணியை மீள கோர முடியாது : ஆளுநர்

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையும் இன்று (27) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கோரிவிடுத்த போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை என்றார் அதற்கான காரணத்தை கண்டறியுமாறும் அதாவது நோய்க்கான காரணத்தை கண்டறிந்தால்தான் நோயை தீர்க்க முடியும். எனவே இராணுவத்திடம் சென்று ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டறியுமாறும் தெரிவித்த ஆளுநர், காணிக்கான ஆவணங்கள் என்ன இருக்கிறது என்றும் கோரினார்.

இதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம் இறுதி யுத்தம் காரணமாக பொது மக்கள் தங்களது உயிர்களை பாதுகாக்க முடியாது சூழல் காணப்பட்டது. பெரும்பாலான பொது மக்கள் தங்களின் சொந்த ஆவணங்களை கூட இழந்திருந்தனர். எனவே நாமும் குறித்த காணிக்கான ஆவணத்தையும் இழந்திருந்தோம். அத்தோடு அன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலாளயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. என்பதனை சுட்டிக்காட்டிய போதே ஆளுநர் தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என பதிலளித்தார்.

குறித்த விடயம் தொடர்பாகன ஆளுநரிடம் கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க. திருலோகமூர்த்தி, செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை எழுத்து மூலம் முன் வைத்திருந்தனர்.

————-

நீதிமன்றங்களில் தனக்கு எதிராக 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு விடயத்திற்கும் நீதிமன்றங்களை நாடி வழக்குத் தாக்கல் செய்வதோடு யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களில் தனக்கு எதிராக இதுவரையில் 217வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதனைத் தான் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் இரண்டு வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். அந்நிலையிலும் கூட வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக, தெரிவித்தார்.

————-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியலமைப்புக்கு முரணானதாக இருந்தால் அதனை நிறைவேற்றப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

Related posts