அமெரிக்கர் உட்பட 102 பேர் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம்

மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான சிறைச்சாலையின் அலுகோசு வெற்றிடத்துக்கு அமெரிக்கர் உட்பட 102 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்தவர்களில் இரண்டு பேர் நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

அலுகோசு பதவிக்கு விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் இரண்டு சாதாரண சித்திகளுடன் கூடிய சித்திகளை கொண்டிருப்பதுடன் வயது 45இற்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டுமென்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிருந்தது.

இப்பதவிக்கான விண்ணப்பம் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts