திசைகள் இளையோர் அமைப்பினால் நாடாத்தப்பட்ட சித்திரப்போட்டி

திசைகள் இளையோர் அமைப்பினால் நாடாத்தப்பட்ட
சித்திரப்போட்டியின் வெற்றியாளர்கள்:

2018 04-11-2018 அன்று டென்மார்க்கில் 8வது முறையாக சித்திரப்போட்டி நடைபெற்றது. இப்போட்டி தமிழீழ விடுதலைப்போரில் தம் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகொள்வதற்காக வருடாவருடம் நடைபெறுகின்றது.

இந்த வருடமும் மாணவர்கள் பல அழகான சித்திரங்களையும் கருத்துக்களையும் தாயாரித்துள்ளனர். அதிகமான மாணவர்களின் பங்களிப்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
பங்குபற்றிய மாணவர்கள் வயதின்படி 4 குழுகளாக பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வோரு குழுவிற்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது.

குழு A – படங்களுக்கு வண்ணம்தீட்டுதல்
குழு B – பூஞ்சோலை
குழு C – கனவு இல்லம்
குழு D – என் அடையாளம்
குழு E – எதிர்காலத்தில் தமிழீழம்

நடுவர்கள் மதிப்பிட்ட சித்திரங்களையும் வெற்றியாளர்களையும் உங்கள் முன் அறிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்.

குழு A வெற்றியாளர்கள்:
இலக்கியா ஞானசேகர் – கொல்ஸ்ரப்ரோ
அஞ்சலி சுரேஸ்குமார் – ரனாஸ்
சோழமங்கை சந்தோஸ் – வயன்

குழு B வெற்றியாளர்கள்:
வின்சிகா – ஓபன்ரோ
அஷ்மியா ராஜன் – ஓகூஸ்
ஜெனித் – கொல்பேக்

குழு C வெற்றியாளர்கள்:
சுபிட்சன் சுஜிதரன் – ரனாஸ்
அக்சனா வாமதேவன் – வைல
சகானா – கேர்னிங்

குழு D வெற்றியாளர்கள்:
சுவேதா ஸ்ரீதரன் – கொல்பேக்
ரோபிகா றோமேயல் – ஓகூஸ்
அபிசனா வாகீசன் – பரதேசியா

குழு E வெற்றியாளர்கள்:
தரனிகா ரகுநாதன் – ஓகூஸ்
ஜெயலக்சுமி ஜெயகுமார் – ஓடென்ஸ்
மீனுசா கதிர்காமநாதன் – ஸ்ரூவர்

வெற்றியாளர்கள் அனைவருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள். டென்மார்க் வாழ் இளையோரின் திறமையை கண்டு நாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றோம். வெற்றியாளர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள். வெற்றியாளர்களின் பரிசுகள் 23.02.2019 நடைபெறும் தில்லான தில்லான கொண்டாட்டத்தில் வழங்கப்படும். போட்டிகளில் பங்குபற்றுவதே ஒரு வெற்றி தான்,
அந்தவகையில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மீண்டும் வரும் ஆண்டில் இன்னும் பலர் இப்போட்டியில் கலந்து சிறப்பிப்பார்கள் என எதிர்பாக்கின்றோம்.
நன்றி
திசைகள் இளையோர் அமைப்பு
டென்மார்க்

Related posts