மீ டூ புகாருக்கு பிறகு பட வாய்ப்பு இல்லை : ஸ்ருதி ஹரிஹரன்

மீ டூ இயக்கம் திரையுலகிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது அர்ஜுன் வழக்கு தொடுத்தார். ஸ்ருதியும் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் மீ டூ புகாருக்கு பிறகு தனக்கு பட வாய்ப்புகள் தர இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பின்வாங்குவதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருப்பதாவது: மீ டூ புகார் கூறுவதற்கு முன் எனக்கு வாரத்தில் 2 பட வாய்ப்பு கன்னட சினிமாவிலிருந்து வரும். இப்போது வருவதில்லை. காரணம், மீ டூ புகார் கூறியதுதான். என்னை தங்களது படத்திற்கு தேர்வு செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.

கன்னட சினிமா என்றில்லை, தென்னிந்திய சினிமாவிலும் இதுதான் நிலை. இது எனக்கு கவலை அளித்தாலும் சோர்ந்துவிடவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலைக்கு நான் வந்ததற்கும் திரையுலகில் நீடிப்பதற்கும் எனது வேலையில் நேர்மையாக இருந்ததே காரணம். நான் ஜெயிப்பேன் என்று தன்னம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts