சசிகலாவிடம் வருமான வரித்துறை இன்று விசாரணை

பெங்களூரு சிறையில் சசிகலா விடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள னர்.

அமமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதே போல சசிகலா பங்கு தாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர் கள் டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்பு டைய அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உட்பட பல் வேறு இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் சென்னை மண்டல வருமான வரித் துறை அதிகாரிகள் இன்றும், நாளை யும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையின் கண் காணிப்பாளர் பி.ரமேஷ் கூறுகை யில், ‘‘சசிகலாவிடம் நேரிலோ, வீடியோ கான்பரன்சிங் மூலமா கவோ விசாரணை நடத்த வருமான வரித்துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு சிறைத் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் வருமான வரித் துறை அதிகாரிகள் நாளையும், நாளை மறுநாளும் (டிசம்பர் 13, 14) விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான நேரம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை” என்றார்.

Related posts