இலங்கையில் அரசியல் நிலவரங்கள் இந்தியா முதற் தடவை கருத்து..

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்கள் குறித்து மற்றெந்த நாடுகளும் கருத்துரைப்பதைவிட இந்தியாவின் கருத்துக்களே மிக முக்கியமாக இருக்கிறது.

இந்திய உளவுப்பிரிவான றோ தற்போதைய ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக ஒரு கதை பரவியது. பின்னர் பிரதமர் மோடியுடன் இலங்கை ஜனாதிபதி உரையாடி விவகாரம் முடிந்து போனதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போதும் விசாரணைகள் தொடர்கின்றன. றோவுடன் தொடர்பு இருத்தல் கூடாதென அமைச்சர் ஒருவர் எச்சரித்ததும் தெரிந்ததே.

மேலும் இந்தியாவின் றோ விவகாரத்தை சீன நிபுணர்களிடம் ஆய்வுக்கு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்துள்ள மாற்றம் இந்தியாவின் கருத்தாலேயே பூரண விளக்கம் பெறும்.

இப்போது இந்தியா மகிந்தவின் நியமனத்தை ஆதரித்து கருத்துரைக்காது அரசியலமைப்பை பேண வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இது குறித்து வெளியான செய்தி.. :

இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவேண்டும் என இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரவீஸ் குமார் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியா இலங்கையில் நடைபெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடு என்ற அடிப்படையிலும் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களும் அரசமைப்பு நடைமுறையும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு எங்களது அபிவிருத்தி உதவிகளை தொடர்ந்தும் வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts