கடுகதி ரயிலில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர கடுகதி ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள அசேலபுர – பிள்ளையாரடியில் இடம்பெற்றுள்ளது. கடுகதி ரயில் வெலிக்கந்தைப் பகுதியைக் கடக்கும்போது காட்டுக்குள் இருந்து புகையிரதப் பாதையைக் கடக்க முற்பட்ட யானைகளே இந்த விபத்தில் சிக்கி கால்கள் துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. இவ்விபத்து காரணமாக விபத்துக்குள்ளான ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானைகளின் உடல்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கும் தடம்புரண்ட பெட்டிகளைப் பழுது பார்ப்பதற்கும் புகையிரதப் பாதையை சீர்செய்வதற்குமான பணிகளைப் புகையிரதத் திணைக்கள அதிகாரிகளும் வன இலாகா அதிகாரிகளும் மேற்கொண்டிருந்தனர்.

Related posts