மீண்டும் வெற்றிமாறன் கதையில் சூரி

‘விடுதலை – பாகம் 2’ படத்தின் படபிடிப்பை முடித்த கையோடு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.
‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப்படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். சூரியுடன், சசிகுமார், உன்னி முகுந்தன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கிறார்.

ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் பெயரிடப்படாத இப்படத்தின் பணிகள் கும்பகோணத்தில் பூஜையுடன் இன்று தொடங்கின. சூரி நடிப்பில் அடுத்தாக ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை பாகம் 2’ திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts