இலங்கை ரயில்வே தனியார் மயமாக்கப்படாது

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கான பாரிய செலவீனங்கள், திறமையின்மை மற்றும் சுயாதீனமாக தீர்மானம் எடுக்க இயலாமை என்பன திணைக்களத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மாற்றம் செய்யாமல், வருங்கால அரசால் ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றார்.

புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts