ஆடம்பரமான கிறிஸ்மஸ் விழாக்கள் வேண்டாம்

இவ்வருடத்தில் நத்தார் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறும், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கத்தோலிக்கர்களுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமய ஆராதனையின் போது

உரையாற்றிய கர்தினால் ரஞ்சித், இவ்வருட கிறிஸ்துமஸ் பண்டிகை பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பதாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். “நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கிறிஸ்துமஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதற்காக பணத்தை வீணாக்கக்கூடாது. பசியில் வாடுபவர்கள் ஏராளம். எனவே, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது மட்டுமே செய்ய வேண்டும்,” என்றார்.

Related posts