கண்ணீர் விட்டு கலங்கிய இந்திய வீராங்கனைகள்..

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஆக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மகளிர் ஆக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஆக்கி மகளிர் அணியின் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார்.

தொலைபேசி உரையாடலின்போது, கண் கலங்கிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

Related posts