தடுப்பூசியையும் மாரடைப்பையும் இணைத்துப் பேசாதீர்கள்

விவேக் மாரடைப்புக்கும் கரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பைச் சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சைக்கு முயன்றார்கள். மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலையில் விவேக் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிக்கையுமே வெளியாகாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பதாவது:
“நடிகர் பத்மஸ்ரீ விவேக் இன்று காலை 11 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரால் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தனர். பின் அவருக்கு ஆஞ்சியோகிராம் தொடர்ந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் உள்ளார். எக்மோ கருவி உதவியுடன் இருக்கிறார். இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென்று நின்றதால் ஏற்பட்ட பிரச்சினை இது. இதற்கும் கரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்”.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விவேக் பூரண நலம் பெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அவற்றின் தொகுப்பு:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்: உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்ன கலைவாணர் அண்ணன் விவேக் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூகச் சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் மீண்டு வந்து தமிழக மக்களைச் சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்: நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
திரைப்படங்களில் சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை கொண்ட பல கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைப்பதிலும், சமூகச் சேவைகள் செய்வதிலும் என்றும் முதலிடத்தில் திகழும் நடிகர் விவேக், விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நகைச்சுவை நடிகர், நண்பர் விவேக் விரைந்து நலம் பெற வாழ்த்துகிறேன்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அருமைச் சகோதரர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது. அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பி தனது கலைப்பணியைத் தொடர வேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்.
இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் இணைத்துப் பேசாதீர்கள் என்று குஷ்பு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்துல் கலாம் மீது தீவிர பற்று கொண்டவர். மரம் நடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.
நேற்று (ஏப்ரல் 15) காலை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக். பின்பு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தை முன்வைத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார்.தயவுசெய்து அவர் நேற்று கரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டதையும், இன்று அவருக்கு மாரடைப்பு வந்ததையும் இணைத்துப் பேசாதீர்கள். இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவர்களை அவர்கள் வேலையைச் செய்ய விடுங்கள். உங்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்றால் தயவுசெய்து போட்டுக் கொள்ளுங்கள். கற்பனைகளையும், புரளிகளையும் வைத்துக் குழம்பாதீர்கள்”.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related posts