சகோதர மொழி அறியாமை வெட்கப்பட வேண்டிய விடயம்

21 மில்லியன் இலங்கை மக்கள் இரண்டு மொழிகளை பயன்படுத்தினாலும், ஒவ்வொருவரும் தனது சகோதர மொழி தொடர்பில் சரிவர அறியாமல் உள்ளதாகவும், இது நாடு என்ற வகையில் நாம் வெட்கப்பட ​வேண்டிய விடயம் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதேபோல், கடந்த 72 வருட அரசியல் முறை இந்த நிலைமையை எம்மிடம் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின் கல்வி முறையின் ஊடாக இந்த நிலைமையை உடனடியாக மாற்ற நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த தினம் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

Related posts