கழிப்பறையில் 10 மாத இரட்டை குழந்தைகள் வெட்டிக் கொலை

சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டின் கழிப்பறையில் குறித்த இரு குழந்தைகளும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10 மாதங்களான இரு பெண் குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான குறித்த குழந்தைகளின் தாய் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் சந்தேக நபரான பெண் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சம்மாற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts