வெலிக்கடை கொலை மூவரடங்கிய நீதிபதி

கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாமை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியசரிடம், சட்ட மா அதிபர், இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியான சம்பவம் தொடர்பில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகிய இருவரும் கடந்த வருடம் (2018) மார்ச் மாதம் CID யினால்கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts