உண்மை சம்பவ கதையில் அமலாபால்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நயன்தாரா போல் நடிக்க ஆரம்பித்துள்ளார் அமலாபால். அதோ அந்த பறவை போல, ஆடை படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மற்றொரு படத்திலும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இந்த படத்தில் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு அபிலாஷ் பிள்ளை கதை எழுதியுள்ளார். அனூப் பணிக்கர் இயக்குகிறார். படம் குறித்து அனூப் பணிக்கர் கூறும்போது, ‘இது புலனாய்வு திரில்லர் கதையாக உருவாகியுள்ளது.

ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அமலா பால் கையாளும் தனித்துவமான வழிமுறைகள்தான் படம். கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் உமாதத்தன் கையாண்ட ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக அவரை அவ்வப்போது சந்தித்தும் தடய அறுவை சிகிச்சை மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள பல்வேறு மருத்துவ கல்லூரிகளுக்கு சென்றும் ஆலோசனைகள் பெற்று திரைக்கதையை எழுதியுள்ளேன். மார்ச்சில் ஷூட்டிங் தொடங்குகிறது’ என்றார்.

Related posts