இம்ரானின் கட்சி தொடர்ந்தும்முன்னிலையில்

பாக்கிஸ்தானில் தேர்தல்வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னாள்பிரதமர் இம்;ரான்கானின்கட்சி முன்னிலையில் உள்ளது

124 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிடிஐ கட்சியினால் களமிறக்கப்பட்ட சுயாதீன வேட்பாளர்கள் 49 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் 38 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் பிடிஜ கட்சியினர் சுயாதீனவேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் 266 ஆசனங்களிற்கான போட்டியில் அவர்கள் முன்னிலையில் காணப்படுகின்றனர்.

Related posts