எனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம்

எனது புகைப்படங்களை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் இனிமேல் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பொறிப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ள ஜனாதிபதி கட்அவுட் மற்றும் அரசியல் கோசங்களில் இருந்து விலகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று (08) மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகயைில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related posts