ஜனாதிபதி எங்களை வன்முறையாளர்களாக்க முயற்சிக்கிறார்

அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியை வன்முறைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தாலும் அவ்வாறானதொன்று எப்பொழுதும் நடக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து பொறுமையுடன் தமது கட்சி செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டுக்கு இனியும் அவலங்கள் தேவையில்லை என்றும், ஆட்சியாளர்கள் எத்தகைய நாசகாரச் செயல்களைச் செய்தாலும், இது போன்ற முயற்சிகளைத் தடுக்க தமது கட்சி இயன்றதைச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி தம்புள்ளையில் நடத்திய வர்த்தக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts