இன்று எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம்

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10 மணிக்கு பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களும், காலை 11 மணிக்கு பன்னீர்செல்வம் தரப்பினரும், பகல் 12 மணிக்கு சசிகலா தரப்பினரும், பிற்பகல் 12.30 மணிக்கு டிடிவி.தினகரன் தரப்பிலும் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இவர்களுக்குள் மோதல் ஏற்படால் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts