ஜனாதிபதி செயலகம் முன்பாக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின், சோசலிச வாலிபர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு, மருதானை டெக்னிக்கல் சந்தியில் இருந்து புறக்கோட்டை வரை பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தற்போது ஜனாதிபதி செயலகம் முன்பாக கூடியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை கடந்து செல்ல ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.

ஆயினும் போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தற்போது வாகன நெரிசல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, தற்போது ஜனாதிபதி செயலத்திற்கு அருகில் காலி வீதிக்கு நுழையும் பகுதியிலிருந்து காலி வீதியின் கொள்ளுபிட்டி நோக்கிச் செல்லும் ஒரு பகுதியில் ஓரளவான வாகன நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts