இந்திய முப்படைகளின் தலைமை தளபதி உள்பட 13 பேர் பலி

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மிதுலிஹா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்

1. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
2. மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
3. பிரிகேடியர் லிடர்
4. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
5. குர்சேவர் சிங்
6. ஜிஜேந்தர் குமார்
7. விவேக் குமார்
8. சார் தேஜா
9. கவில்தார் சத்பால்

மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

* ஹெலிகாப்டர் விபத்துக்கு என்ன காரணம்?

* ஹெலிகாப்டர் மின்கம்பிகளில் மோதியதா?

* விபத்துக்குள்ளானபோது ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் இருந்தது?

* இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா?

ஹெலிகாப்டர் எம்.ஐ 17 விஐ ரகத்தைச் சேர்ந்தது. ரஷிய நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸிடமிருந்து இந்தியா இதனை வாங்கியது.

இது ராணுவ ஆயுதங்கள், வீரர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. இதனை தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.

கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை.

கதவுகளை இழுவை மூலம் திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள், எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் உள்ளன

36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது.
இந்த ஹெலிகாப்டரில் ஷட்டர்ன் வி ரக துப்பாக்கிகள், எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23எம்எம் எந்திர துப்பாக்கிகள், பிகேடி எந்திர துப்பாக்கி, ஏகேஎம் எந்திரதுப்பாக்கி மூலம் எதிரிகளை சுடமுடியும் தாக்க முடியும்.

எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பது, வாகனங்களை அழிப்பது, குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை சரியாகத் தாக்குவது போன்றவற்றை இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்யலாம்.

இந்த ஹெலிகாப்டரில் போம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். இது ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும்.

இது மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியும். அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்க முடியும்.

—–

இதுவரை ஹெலிகாப்டர் விபத்தில், 8 முக்கிய பிரமுகர்கள் இறந்துள்ளார்கள்,

ஆகஸ்ட் 18, 1945 – ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,

மே 30, 1973 – ல் மத்திய அமைச்சர், மோகன் குமாரமங்கலம்,

ஜூன் 23, 1980 – ல் காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் காந்தி,

நவம்பர் 14, 1997 – ல் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் என்.வி.என் சோமு,

செப்டம்பர் 30, 2001 – ல் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா,

மார்ச் 3, 2002 -ல் ஜி.எம்.சி. மக்களவை சபாநாயகர் பாலயோகி,

ஏப்ரல் 17, 2004 -ல் நடிகை சவுந்தர்யா,

செப்டம்பர் 3, 2009 – ல் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோர் இறந்துள்ளார்கள்.

டிசம்பர் 8, 2021-ல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்த்திரியாக இருமுறை பதவி வகித்தவர் ராஜசேகர ரெட்டி என்கிற ஒய்எஸ்ஆர். கடந்த 2009ம் ஆண்டில் இவர் பயணித்த ஹெலிகாப்டர் ருத்ரகொண்டா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சவுந்தர்யா. அம்மன், அருணாச்சலம். படையப்பா உட்பட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தெலுங்கு சினிமாவின் நவீன சாவித்ரி என்று அழைக்கும் அளவுக்கு தனது நடிப்பு திறமையால் மக்களின் மனங்களை வென்ற சவுந்தர்யா, கடந்த 2004ம் ஆண்டு தான் சார்ந்த பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கரிம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது விமானம் வெடித்து சவுந்தர்யா உயிரிழந்தார்.

மாதவராவ் சிந்தியா பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் குவாலியரின் சுதேச அரசின் கடைசி ஆளும் மகாராஜாவான ஜீவஜிரோ சிந்தியாவின் மகன். மத்திய விமான போக்குவரத்து அமைச்சர், மத்திய சுற்றுலா துறை அமைச்சர், மத்திய ரெயில்வே இணை அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த சிந்தியா, கடந்த 2001ம் ஆண்டு உத்தரப் பிரதேசம் அருகே விமான விபத்தில் உயிரிழந்தார்.

ஜி. எம். சி. பாலாயோகி ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரான இவர். இந்தியாவின் 12வது மக்களவை தலைவராக பணியாற்றியுள்ளார். சபாநாயகராக இருந்தபோதே கடந்த 2002ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

சஞ்சய் காந்தி இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன். இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவராக உருவாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி கடந்த 1980ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார்.

மோகன் குமாரமங்கலம் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.சுப்பராயனின் மகன். மத்திய இரும்பு மற்றும் சுரங்கத்துறை மந்திரியாக இருந்துள்ள மோகன் குமாரமங்கலம் கடந்த 1973ம் ஆண்டு உயிரிழந்தார். இவர் பயன்படுத்தும் பார்க்கர் பேனா மற்றும் காதில் அணியும் கருவி மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

டோர்ஜி காண்டு அருணாச்சல பிரதேச முன்னாள் முதல் மந்த்திரி 2011ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இவர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. மே 5ம் தேதி டோர்ஜி காண்டுவின் உயிரிழப்பு உறுதிபடுத்தப்பட்டது.

ஜின்டல் என்று அழைக்கப்படும் ஓம் பிரகாஷ் ஜின்டல். மாபெரும் தொழில் அதிபராக திகழ்ந்தவர். அரியானாவின் மின் துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார். 2005ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

Related posts