மீண்டும் தொடங்கியது ‘வெந்து தணிந்தது காடு

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் .மாநாடு திரைப்படம் வெளியீடு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளதாக நடிகர் சிம்பு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts