மாவீரர் தின புகைபடத்தை முகநூலில் பதிவிட்ட நபர் கைது

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றைய தினம் (27). விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts