சாலு சவுராசியா மீது மர்ம நபர் தாக்குதல்

கேபிஆர் பூங்கா அருகே அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் சாலு சவுராசியா காயமடைந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை சாலு சவுராசியா. இவர் நேற்று இரவு ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கேபிஆர் பூங்கா அருகே அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கேபிஆர் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த சாலு சவுராசியாவை தாக்கிய மர்ம நபர் அவரது மொபைல் போனை பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து சாலு சவுராசியா போலீசிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது :

முதலில் ஒரு நபர் என்னிடம் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைக்குமாறு கூறினான்.அதற்கு நான் மறுத்தபோது ​​அவன் என் முகத்தில் குத்தினான், மேலும் கல்லால் தாக்க முயன்றான். பின்னர் எனது மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டான் .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts