மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்த சீன தூதரகம்

மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் இணைத்துள்ளதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சீன நிறுவனமொன்றிடமிருந்து கொள்வனவு செய்த சேதன பசளை தொடர்பில் அதனை கொண்டு வந்த கப்பலை துறைமுகத்திற்குள் நுழைய விடாது, அந்நிறுவனத்திற்கான கொடுப்பனவை இடைநிறுத்தி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சேதன உரம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts