நமக்குள் ஒற்றுமை தான் முக்கியம் சசிகலா !

தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு தெரியும் என சசிகலா கூறினார்.

சென்னை ராமாபுரத்தில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு தான் சென்றேன். தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு தெரியும். அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு. மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டியது நேரமிது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றுதான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நமக்குத்தேவை ஒற்றுமைதான்; நீரடித்து நீர் விலகாது. மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எந்த பொறுப்பில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். நாம் ஒன்றாக வேண்டும், அதிமுக வென்றாக வேண்டும் என்றார்.

Related posts