திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (08) முற்பகல் ஆஜரான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசன் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

கடந்த தினம் வௌியான பெண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கடந்த தினம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, பெண்டோரா ஆவணங்களில் திருக்குமார் நடேசனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts