நடிகர் ஆர்யா வழக்கு – சென்னை காவல் ஆணையர் விளக்கம்

ஜெர்மனியில் குடியேறிய இலங்கை பெண்ணை நடிகர் ஆர்யா ஏமாற்றவில்லை என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிவிட்டதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து நடிகர் ஆர்யா வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

புகாரின் அடிப்படையிலே நடிகர் ஆர்யாவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மொபைல் எண்ணை வைத்து இடத்தை கண்டுபிடித்த போது பெண் குரலில் பேசியது தெரியவந்தது. வழக்கில் ஆர்யாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்ததற்காக என்னை சந்தித்து ஆர்யா நன்றி தெரிவித்தார் என்றார்.

Related posts