நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில்..

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

—–

கொரோனாவால் நடிகர் ஜோக்கர் துளசி காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி. இதற்கு முன்னதாக இவர் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

—-

மறைந்த பழம் பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழி வர்மன். இவர் பிரபல நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி ஆகியோரின் சகோதரர் ஆவார்.
அருண் மொழி வர்மன் தமிழில் சிமிழ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். தெலுங்கில் ஶ்ரீஹரி நடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்மொழி வர்மனுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து தியாகராய நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அருண்மொழி வர்மன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. மரணம் அடைந்த அருண்மொழி வர்மனுக்கு ஷர்லி என்ற மனைவியும் அப்ரினா, மகாலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். அருண்மொழி வர்மன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

—–

முரளி, தேவயானி, வடிவேல் நடித்த கண்ணுக்கு கண்ணாக படத்தின் மூலம் இயக்குனரானார். தயாளனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி தயாளன் மரணம் அடைந்தார். ஏற்கனவே இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனா தொற்றில் சிக்கி மரணம் அடைந்தனர். கொரோனாவுக்கு திரையுலகினர் அடுத்தடுத்து பலியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts