நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளை

எதிர்வரும் தினங்களில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவாவதாக இருந்தால் குறித்த பிரதேசத்தை கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது நகரங்களுக்கு இடையில் பயணிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
அதேபோல், நாட்மை முடக்கவோ அல்லது வேறு சட்டங்களை அமுல்படுத்தவோ எந்தவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

—–

ஏப்ரல் 21 ம் திகதி பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் பொறுப்பு இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார்.

குழுவில் நியமிக்கப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்
பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

——

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 18 தங்கப்பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின் வீட்டுக்குள் சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.

அந்த கொள்ளை உட்பட கந்தரோடை, நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேக நபரே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நல்லூரைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

சந்தே நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

Related posts