புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார். விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த சகுந்தலைக்கும் துஷ்யந்த மன்னனுக்கும் காதல் மலர்கிறது. துருவாச முனிவர் சாபத்தினால் அந்த காதலை துஷ்யந்தன் மறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை டைரக்டு செய்தவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை தேர்வு செய்தனர். இந்த படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும் தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார்.

Related posts