சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், மகன் துஷ்யந்துடன், பா.ஜனதாவில்

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், மகன் துஷ்யந்துடன், பா.ஜனதாவில் இணைகிறார்.தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை இன்று ராம்குமார் சந்தித்து பேசினார்.

வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். காங்கிரசின் முக்கிய நிர்வாகியாக இருந்த குஷ்பு பா.ஜனதாவில் இணைந்தார். ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரும் பா.ஜனதாவில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், மூத்த நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் நாளை பா.ஜனதாவில் இணைகிறார். திருவான்மியூரில் நடைபெறும் பா.ஜனதா கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் இணைகிறார்.

இதுபோல், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரும், அவரது மகனும் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகளுடன் அவர் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை இன்று ராம்குமார் சந்தித்தார். பா.ஜனதா தலைமையகமான கமலாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தன் மகன் துஷ்யந்துடன், பா.ஜ.,வில் இணைய விரும்புகிறார். இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகிகளுடன், ராம்குமார், சமீபத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எனவே, ராம்குமாரும், அவரது மகனும், விரைவில், பா.ஜ.,வில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts