பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநாதி போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதனிடையே அவர் தற்போது வரவிருக்கும் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேரள் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் டொவினோவின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. கடுமையான வலி இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உள் இரத்தப்போக்குடன் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவரின் பிஆர்ஓ நிகில் முருகன் வெளியிட்டுள்ள டடுவிட்டர் பதிவில், டொவினோ தாமஸ் கால படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts