நடிகர் சூர்யா முதற்கட்டமாக ரூ.1.5 கோடி நிதியுதவி

சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையில், முதற்கட்டமாக ரூ.1.5 கோடி நிதியுதவி நடிகர் சூர்யா வழங்கினார்.

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கடந்த 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

‘சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ரூ.5 கோடியை பகிர்ந்து அளிக்க முடிவு செய்து இருக்கிறேன் என்றும்,

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று சூர்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சூரரைப்போற்று வெளியீட்டுத்தொகையில் இருந்து சூர்யா சார்பாக சிவக்குமார் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கினார். முதல்கட்டமாக பெப்ஸிக்கு ரூ1.கோடியும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.

Related posts