சர்ச்சைக்குள்ளான விக்கியின் உரை ஹன்சார்ட்டில் சேர்ப்பு

தென்னிலங்கை அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20ஆம் திகதி உரையாற்றினார். இதனையடுத்து சி.வி.விக்கினேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து ஆராய்வதாக அன்றையதினமே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தெரிவித்திருந்தபோதும் விக்கினேஸ்வரனின் உரையின் விவரிக்கப்படாத பதிப்பு பாராளுமன்றத்தின் ஹன்சார்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

——-

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்துக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர,

” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள சில அதிகாரங்கள் அச்சுறுத்தலானவை. தற்போது அவை நடைமுறைப்படுத்தப்படவில்லையென்றபோதிலும் சட்டத்தில் உள்ளன.

எனவே, அவற்றில் திருத்தம் மேற்கொள்ளாது மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தல் உட்பட நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பொன்றை உருவாக்கிய பின்னரே தேர்தல் நடத்தப்படவேண்டும்.

நாட்டில் இரண்டாண்டுகளாக மாகாணசபைகள் இயங்கவில்லை.இதனால் யாருக்கும் எந்தவித இழப்புகளும் இல்லை. எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறப்பு.” – என்றார்.

Related posts