ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

வேயங்கொட – குடல்ஒலுவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றில் வாய்கால் ஒன்றில் கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் ஒன்றரை வயது மற்றும் 9 வயது பிள்ளைகள் இருவரும் அவர்களுடைய தாயும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தாயே முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவருக்கு நித்திரை ஏற்பட்டதான காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts