கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு 70 கடற்படையினர் இன்று 06-06-2020 வெளியேறியுள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமுக்கு வெளிசர கடற்படை முகாமில் இருந்து கடந்த 20 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக கடற்படையினர் 167 பேர் அழைத்துவரப்பட்டனர்.
தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்ட கடற்படையினருக்கு பிசிஆர் (PCR) பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் 70 பேர் தனிமைப்படுத்தல் நிறைவுசெய்து இன்று வெளியேறியுள்ளார்கள்.
எஞ்சியுள்ள 97 கடற்படையினரின் PCR பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் அவர்களும் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறவுள்ளனர். என இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குறூப் கப்படன் றொகான் பத்திரண தெரிவித்துள்ளார்.
-கிளிநொச்சி நிருபர் நிபோஜன்-