பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான நேற்றைய (12) சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை யாழ்.நல்லூர் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த சுமந்திரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பாதாகையை பொலிஸார் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

அதில் ´நான் தமிழ் மக்களின் துரோகி´ என எழுதப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படும் நிலையில் அது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related posts