சிறையில் இருந்து விடுதலை – வீட்டுக்காவலில் ரொனால்டினோ!

பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 2002 ஆம் ஆண்டு பிரேசில் அணி உலக கிண்ணத்தை கைப்பற்றிய போது இவர் அணியில் இருந்தவர். மேலும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், பார்சிலோனா, ஏசி மிலன் போன்ற உலக புகழ்பெற்ற கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

40 வயதாகும் ரொனால்டினோ 2015 இல் கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த மாதம் 6 ஆம் திகதி பராகுவே நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது சகோதரர் ரொபேர்ட்டோ ஆஸ்சிஸ் உடன் தங்கியிருந்தார். அப்போது பொலிஸார் அவர்களிடம் சோதனை நடத்தியபோது இருவரும் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.

பொலிஸார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் எனத் தெரியவந்தது. இதனால் சகோதரருடன் ரொனால்டோ சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் நிதிமன்றம் இவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது.

அதன்பின் இருவரும் தலா 8 லட்சம் டொலர் பிணைத் தொகை கட்டி பிணை பெற்றுள்ளனர். அத்துடன் இருவரும் விசாரணை முடியும் வரை வீட்டிக்காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நட்சத்திர ஓட்டலில் காவலில் இருக்கின்றனர்.

Related posts