யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் கறுப்பு கொடிகளுடன் பதாதை

இலங்கையின் 72 வது சுதந்திர தினமான இன்று (04) யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் கறுப்பு கொடிகளுடன் பதாதை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கையின் பொறுப்புக் கூறல் விவகாரம், ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும். கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது, இவ்வாறு குறிப்பிடப்பட்ட பதாதையே கட்டப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து வடகிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் அந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறும் நேற்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts