பொய்யை மட்டும் சுவாசித்து வாழும் நிர்மலா சீதாராமன் : குஷ்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை ட்விட்டரில் ப்ளாக் செய்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ, மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துவிட்டார். அவர் உண்மையை கேட்க விரும்பவில்லை. அவர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்று பொய்யை மட்டும் சுவாசித்து, உண்டு, வாழும் நபர்களுடன் வாழ்வதால் அவரை குற்றம் சுமத்த ஒன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொருளாதார மந்த நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி விவாதித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதமே குஷ்புவை, நிர்மலா சீதாராமன் ப்ளாக் செய்துள்ளார். தற்போது அதனை மீண்டும் நினைவுப்படுத்தும்படியாக குஷ்பு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts