குடியுரிமை சட்டம், சாவர்க்கர் கொள்கைக்கு எதிரானது

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, லண்டனில் இந்திய தூதரகம் முன்பு, போராட்டம் நடந்தது. இங்கிலாந்தில் குடியேறிய அசாம் மாநில மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடையில், குழந்தைகளுடன் அவர்கள் பங்கேற்றனர்.

‘ஜனநாயகத்தை பாதுகாப்போம், குடியுரிமை சட்டத்தை தடுத்து நிறுத்துவோம்‘ என்று ஆங்கிலத்திலும், அசாமி மொழியிலும் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் பிடித்திருந்தனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

அதுபோல், இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, நேற்று நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் பாதுகாப்பு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டம், சித்தாந்தம் அடிப்படையிலானதா? அப்படியானால், அதற்கு எதிராக நடந்த வன்முறை குறித்து என்ன சொல்வது?

இந்த குடியுரிமை சட்டம், சிந்து நதி முதல் கன்னியாகுமரி வரை ஒரே தேசமாக விளங்க வேண்டும் என்று விரும்பிய சாவர்க்கரின் கொள்கைக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

Related posts