பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் …!

கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து இருப்பது போன்ற படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது நயனதாரா நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு திடீரென நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தனர்.

இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்து கொண்டு ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சுமார் அரை மணி நேர தரிசனத்திற்கு பிறகு கோயிலில் இருந்து வெளியே வந்த நயன்தாரா, அங்கு திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ரசிகர்களுக்கு கையசைத்தபடி இருவரும் காரில் ஏறி சென்றனர்.

Related posts