சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் பொறுப்பேற்க தயார்

சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியாக நடவடிக்கை முன்னெடுத்த செல்வது தனது விருப்பமாயினும் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் தான் சபாநாயகராக இருக்க விருப்பமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts