4 மொழிகளில் ரஜினியின் ‘தர்பார்’

பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலே கதை. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடந்துள்ளது. படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தர்பார் படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இதற்கான டப்பிங் பணிகள் நடக்கின்றன. அந்தந்த மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் இன்று மாலை ரஜினியின் தர்பார் தோற்ற போஸ்டரை வெளியிடுகின்றனர்.

அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி தயாராகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கதாநாயகியாக நடிக்க ஜோதிகா, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. ஜோதிகாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts