தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை ?

கன்­னியா வெந்நீ­ரூற்றுப் பிள்­ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட கூட்­டத்தில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இந்த சந்­திப்­பின்­போது கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

அமைச்­சரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணே­சனின் ஏற்­பாட்டில் கன்­னியா வென்­னீ­ரூற்று பிள்ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். இதற்­கென நேற்று 11 மணிக்கு விசேட கூட்­டத்­தையும் ஜனா­தி­பதி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்­தக்­கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் பி. திகாம்­பரம், எம்.பிக்­க­ளான எம். தில­கராஜ், வேலுக்­குமார் மட்­டக்­க­ளப்பு மாவட்ட எம்.பி. வியா­ழேந்­திரன், ஆகிய ஐவ­ருமே கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்பில் பங்­கேற்­கு­மாறு தமிழ் தேசியக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், உட்­பட கூட்­ட­மைப்பு எம்.பி.க்களிடம் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக அவர்­களும் அமைச்சர் மனோ கணே­ச­னுக்கு உறுதி வழங்­கி­யி­ருந்­தனர். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னையும் அழைத்­துக்­கொண்டு கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக சுமந்­திரன் எம்.பி. உறுதி அளித்­தி­ருந்தார். ஆனாலும் இறுதி நேரத்தில் இந்­தக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் எவரும் பங்­கேற்­க­வில்லை.

இந்த நிலையில் கூட்டம் ஆரம்­பித்­த­வுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் வர­வில்லை என்று ஜனா­தி­பதி அமைச்சர் மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான கூட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு இ.தொ.கா. தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் உட்­பட சகல தமிழ் எம்.பி.க்களுக்கும் அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிலர் வெளிநாடு சென்றிருந்தமையினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Related posts