எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க பயந்த பிரியா பவானி சங்கர்

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான்ஸ்டர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பிரியா பவானி சங்கர், நெல்சன் சார் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கேட்ட போது முதலில் உண்மையிலேயே நான் பயந்தேன்.

காரணம் என்னவென்றால் பயங்கர கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருந்தேன். படப்பிடிப்பில் கலந்துகொண்டபிறகுதான் அவரது குழந்தை தன்மை தெரிந்தது. படப்பிடிப்பு முடியும் ஒவ்வொரு நாளும் அவ்வளவு பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார். மான்ஸ்டர் படத்தில் 25 நாட்கள் நடித்தேன். அத்தனை நாட்களும் அவ்வளவு ஜாலியாக இருந்தது என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

Related posts